வீட்டில் தீய சக்திகள் இருந்தால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரங்களை செய்தாலே போதும். தற்போது அதனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

பரிகாரம்
பலன்கள்

பரிகாரம்
- வீட்டில் உள்ள தீய சக்தியை விலக்க தினமும் மாலை வேளைகளில் சிறிது மஞ்சள் எடுத்து, வீட்டு வாசல் படியின் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்களை வரைந்து கொள்ள வேண்டும்.
- அந்த இரண்டு சதுரங்களிலும் ஒரு வேப்பிலையை வைக்க வேண்டும்.
- வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு இருப்பது நல்லது.
- பிறகு அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வைத்து, எண்ணெய் ஊற்றி, மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
- மேற் சொல்லப்பட்ட முறையில் தினமும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வந்தால், அந்த வீட்டில் இருக்கின்ற எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் விரைவிலேயே நேர்மறையான ஆற்றல்களாக மாறுவதை காணலாம்.
பலன்கள்
- வீட்டில் உள்ள தீய சக்தியை விலக்குவதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
- பிரிந்து வாழும் தம்பதியர்கள் இந்த பரிகாரம் செய்வதால் கூடிய விரைவில் ஒன்றிணைந்து வாழ்வார்கள்.
- குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள் போன்றவை நீங்கும்.
- பிறருடன் விரோதம் ஏற்படுவது, எதிரிகளால் நமக்கு பாதிப்புகள் ஏற்படுவது போன்ற பிரச்னைகள் நீங்கும்.