மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். இவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று வரும் போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.
மேலும் பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும்.
அதுவும் இவர்கள் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்தால் தடையில்லாத முன்னேற்றம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன் கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை தானம் கொடுக்க வேண்டும். மேலும் இவர்கள் ஏழை மாணவர்களின் படிப்பிற்கு பண தானம் கொடுத்தால் எல்லா வித செல்வமும் தேடி வரும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் பசு மாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும்.
மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் இவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். அதனால் மனதில் அமைதி ஏற்படும்.
மேலும் இவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக் கொடுத்தால் இவர்கள் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழ்வார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழி படவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா ஆகியவற்றை தானம் கொடுக்காலாம். அது கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் பல முன்னேற்றத்தை கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கை கொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல் தானம் செய்ய வேண்டும். இதனால் புதிய சொத்துக்கள் வந்து சேரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத் திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம்.
மேலும் இவர்கள் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட்டு, குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம்.
வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்வதுடன், செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்தால் வாழ்வு செழிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவ வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். இதனால் தெய்வங்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கூட்டஞ்சோற்றை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் இவர்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்தால், கூடுதல் நன்மை உண்டாகும்.